முருகன் 
தற்போதைய செய்திகள்

மின் கம்பி அறுந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி!

மின்கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து விழுந்து கழுத்தில் சிக்கி கூலித் தொழிலாளி பலியானார்.

DIN

கயத்தாறு அருகே மின்கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து விழுந்து கழுத்தில் சிக்கி கூலித் தொழிலாளி பலியானார்.

கயத்தாறு அருகே சிவஞானபுரம் ஊராட்சி வாகைகுளம் கிராமத்தில் சாலையில் இருந்த மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து தரையை நோக்கி தொங்கி இருந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அந்த வழியாக நடந்து சென்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன்(40) என்பவர் தொங்கிய நிலையில் கிடந்த மின்கம்பி கழுத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார்.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

இச்சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீஸார் முருகனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்துமென டிரம்ப் மட்டுமே கூறுகிறார்! - ரஷிய அரசு விமர்சனம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு!

வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? தில்லி அணியா?: முதல்வர் ஸ்டாலின் சூளுரை

எல்லீஸ், ஸாம்பா மிரட்டல் பந்துவீச்சு..! ஆஸி. 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம்!

SCROLL FOR NEXT