மின் கம்பி அறுந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி!
மின்கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து விழுந்து கழுத்தில் சிக்கி கூலித் தொழிலாளி பலியானார்.
கயத்தாறு அருகே மின்கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து விழுந்து கழுத்தில் சிக்கி கூலித் தொழிலாளி பலியானார்.
கயத்தாறு அருகே சிவஞானபுரம் ஊராட்சி வாகைகுளம் கிராமத்தில் சாலையில் இருந்த மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து தரையை நோக்கி தொங்கி இருந்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அந்த வழியாக நடந்து சென்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன்(40) என்பவர் தொங்கிய நிலையில் கிடந்த மின்கம்பி கழுத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!
இச்சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீஸார் முருகனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.