முகப்பு
தற்போதைய செய்திகள்

உலகத்தை இணைத்துள்ளது யோகா: பிரதமர் மோடி

யோகா முழு உலகத்தை இணைத்துள்ளது. யோகா உலகத்துடன் ஒற்றுமையை நோக்கி மக்களை வழிநடத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Updated On : 21 ஜூன் 2025, 8:50 am IST
ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11 ஆவது சர்வதேச யோகா நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:

விசாகப்பட்டினம்: யோகா முழு உலகத்தை இணைத்துள்ளது. யோகா உலகத்துடன் ஒற்றுமையை நோக்கி மக்களை வழிநடத்துகிறது, அதே நேரத்தில் சர்வதேச யோகா நாள் உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும் மனிதகுலத்திற்கான பண்டைய நடைமுறையின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.

ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா நாள் கடைபிடிக்கப்படும் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி ஐ.நா. அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல் யோகா நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 11 ஆவது சர்வதேச யோகா நாள், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்ற கருப்பொருளுடன் சனிக்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

ஆந்திரம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஆா்.கே. கடற்கரையில் இருந்து போகாபுரம் வரை 26 கி.மீ. தொலைவிலான சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற 11 ஆவது சர்வதேச யோகா நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, 11 ஆவது யோக நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி, யோகா முழு உலகத்தையும் இணைத்துள்ளது. ஜூன் 21 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா நாளாகக் கொண்டாட இந்தியா முன்மொழிந்தபோது, ​​குறுகிய காலத்தில் 175 நாடுகள் அதை ஏற்றுக்கொண்டன.

11 ஆண்டுகளுக்குப் பிறகு, யோகா இப்போது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. யோகா வாழ்க்கையின் ஒரு கலை. அது நம்மை எல்லோரையும் இணைக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

சிட்னி ஓபரா ஹவுஸ் அல்லது எவரெஸ்ட் மலை அல்லது கடலின் பரப்பளவு உள்பட யோகா அனைவருக்குமானது. நாம் தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்கள் அல்ல, இயற்கையின் ஒரு பகுதி என்பதை நமக்கு கற்பிக்கிறது.

உலகம் முழுவதும் சில பதட்டங்கள், அமைதியின்மை மற்றும் பல பகுதிகளில் உறுதியற்ற தன்மை அதிகரித்து வருவதாக கூறிய மோடி, "இந்த யோகாவை மனிதகுலத்திற்கான ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம். யோகா அமைத்திக்கான வழியையும், மனதை ஆசுவாசப்படுத்தவும், சமாதானப்படுத்தவும் உதவுகிறது. உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும்" என்று உலகிற்கு தனது வேண்டுகோளாக கூறினார்.

ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11 ஆவது சர்வதேச யோகா நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி.

மேலும், யோகா முழு உலகத்தையும் இணைத்து ஒற்றுமையை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. யோகா நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் அடைவதற்கு ஒரு நாகரீகம். யோகா என்பது எல்லைகள், பின்னணிகள், வயது அல்லது திறன்களுக்கு அப்பாற்பட்ட அனைவருக்கும் ஏற்றது.

யோகா என்பது ஒரு சிறந்த தனிப்பட்ட ஒழுக்கம், மக்களை "நான் என்பதிலிருந்து நாம்" என்று சொல்வதற்கு அழைத்துச் செல்லும் ஒரு அமைப்பு, மேலும் மனிதகுலம் மீண்டும் முழுமையடைய சுவாசிக்க, சமநிலைப்படுத்த தேவையான இடைநிறுத்த பொத்தான் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் உரையாற்றிய பின்னர், ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு பேசுகையில், மோடி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் யோகாவை பிரபலப்படுத்தி, அதை உலகளாவிய நல்வாழ்வு இயக்கமாக மாற்றியுள்ளார்.

யோகா நாள் 175-க்கும் மேற்பட்ட நாடுகளில், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில், 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் பங்கேற்புடன் கொண்டாடப்படுகிறது.

"இந்தியாவில் மட்டுமல்ல (உலகம் முழுவதும்) யோகாவைப் பிரபலப்படுத்தியதற்காக நமது தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் சர்வதேச யோகா நாளை தொடங்கி, யோகாவை உலகளாவிய நல்வாழ்வு இயக்கமாக மாற்றியவர் மோடி" என்று நாயுடு கூறினார்.

சனிக்கிழமை காலை நடைபெற்ற யோக பயிற்சி நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய ஆயுள் துறை மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் யோக குருக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 3 லட்சம் போ் பங்கேற்று, ஒரே நேரத்தில் யோக பயிற்சிகளை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments