கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

ஹைதி: கும்பல் தாக்குதலில் கென்யா அதிகாரி மாயம்!

ஹைதியில் கும்பல் தாக்குதலில் கென்யா நாட்டு அதிகாரி ஒருவர் மாயமாகியுள்ளதைப் பற்றி...

DIN

ஹைதியில் குற்றவாளி கும்பலின் தாக்குதலில் கென்யா நாட்டு அதிகாரி ஒருவர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கரிபியன் கடல் பகுதியிலுள்ள ஹைதி நாட்டில் ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் பணியமர்த்தப்பட்ட கென்யா நாட்டு அதிகாரி ஒருவர், அங்குள்ள பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து குற்றவாளி கும்பல்கள் நடத்திய தாக்குதலில் மாயமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு குற்றவாளி கும்பல்களினால் தோண்டப்பட்டதாகக் கருதப்படும் குழியினுள் சிக்கிய ஹைதி காவல் துறையினரை மீட்க நேற்று (மார்ச் 25) கென்யா நாட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அப்போது, அதில் ஒரு கென்யா நாட்டு அதிகாரி மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான அதிகாரியைப் பற்றிய தகவல்கள் தற்போது வரை வெளியிடப்படாத நிலையில் அவரை மீட்கும் பணியில் சிறப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், ஹைதியின் உள்ளூர் ஊடகங்களில் கென்யா அதிகாரியின் சீருடையில் கொல்லப்பட்ட நிலையில் ஒருவரது உடல் கிடப்பதைப் பதிவு செய்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

முன்னதாக, குற்றவாளி கும்பல்களின் வன்முறையினால் ஹைதி நாட்டில் சுமார் 10 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மேலும், அந்நாட்டு தலைநகரை கைப்பற்ற முயற்சிக்கும் கும்பல்களை எதிர்த்து போரிட ஹைதி நாட்டுக்கு 1,000 பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள் என கென்யா உறுதியத்திருந்தது. இதனால், கடந்த 2024 ஜூன் மாதம் முதல் 800 அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பெரு நாட்டில் 2026-ல் பொதுத் தேர்தல்! அதிபர் அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா

பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!

ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்

SCROLL FOR NEXT