தற்போதைய செய்திகள்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து!

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.

DIN

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் முதல் மாடியில் இன்று(மார்ச் 27) பிற்பகல் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

உடனடியாக வேப்பேரி பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விரைவாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மின் வயரில் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டதால் சிக்னல் தகவல் அனுப்புவதில் பிரச்னை ஏற்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை சரிசெய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT