கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

உதகையில் மரம் விழுந்து கேரள சிறுவன் பலி

உதகையில் கனமழை பெய்து வரும் நிலையில், மரம் முறிந்து விழுந்ததில் கேரளம் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஆதிதேவ்(15) பலியானார்.

DIN

உதகையில் கனமழை பெய்து வரும் நிலையில், மரம் முறிந்து விழுந்ததில் கேரளம் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஆதிதேவ்(15) பலியானார்.

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மே 26, 27-ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதோடு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இருக்கும் காலநிலைக்கு ஏற்றாா்போல சுற்றுலாப் பயணிகள் வருவது குறித்து அறிவிக்கப்படும். மேலும், ஆற்றோரங்களில் யாரும் குளிக்கவோ, வேறு எந்த பணிக்கும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளம் மாநிலம் கள்ளிக்கோட்டையில் இருந்து பெற்றோருடன் உதகைக்கு சுற்றுலா வந்த சிறுவன் ஆதிதேவ், பைன் ஃபாரஸ்ட் பகுதியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, 7 ஆம் மைல் பகுதியில் பலத்த காற்று காரணமாக, திடீரென மரம் முறிந்து விழுந்தது. இதில், சிக்கிய சிறுவன் ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கேரளத்தில் இருந்து பெற்றோருடன் உதைக்கு சுற்றுலா வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சுற்றுலா வந்த மக்களிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இத்தாலி அபார வெற்றி!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

பீகாகர்கி மரண வழக்கில் பாபா கைது! விசாரணையில் வெளியான அதிர்ச்சி!!

மேல் வயிற்றில் வலி அல்லது எரிச்சலா? ஏன்? என்ன செய்ய வேண்டும்?

அதர்வாவின் இதயம் முரளி படத்தில் ஃபகத் ஃபாசில்!

SCROLL FOR NEXT