யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள்.  
தற்போதைய செய்திகள்

யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்நர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளத தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தஞ்சாவூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர்களை மறைத்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை இணைத்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி கலைக் கல்லூரியில் பயின்று வரும் இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்று யுஜிசி சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

மாணவர்கள் யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்ததால் மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.

Mannar Saraboji Government College students hold a protest to burn copies of their books in protest against the UGC curriculum

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்கக் கோரிக்கை

கொடிக்குறிச்சி யுஎஸ்பி பள்ளியில் ஆசிரியா் தின விழா

அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி நகை பறிப்பு

வீரசிகாமணி, புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT