முகப்பு
தற்போதைய செய்திகள்

தேர்தல் பயமும் பதற்றமும் எடப்பாடி பழனிசாமியை ஆட்டிப்படைக்கின்றன: கனிமொழி

தேர்தல் பயமும் பதற்றமும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஆட்டிப்படைக்கின்றன என பேசியது குறித்து...

Updated On : 10 ஏப்ரல், 2026 at 11:36 AM
திமுக வேட்பாளா் எஸ். முத்துசாமியை ஆதரித்து ஈரோட்டில் பேசுகிறாா் திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. - டிஎன்எஸ்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 11:14 AM

ஈரோடு: தேர்தல் பயமும் பதற்றமும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஆட்டிப்படைக்கின்றன என்று திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரும் தமிழக அமைச்சருமான எஸ். முத்துசாமிக்கு ஆதரவு கேட்டு, ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய கனிமொழி பேசியதாவது:

எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தனது பொறுப்பைக்கூட முறையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Advertisement

Updated On : 10 ஏப்ரல், 2026 at 11:17 AM

"தேர்தல் பயமும் பதற்றமும் அவரைத் தொடர்ந்து ஆட்டிப்படைக்கின்றன. இந்தப் பயத்தின் காரணமாகவே, எடப்பாடி பழனிசாமி தான் என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்றோ தெரியாமலேயே நாள்தோறும் பேசிக்கொண்டிருக்கிறார். தான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நினைவுக்கூட இல்லாமல், ஒரு மூன்றாம் நிலை பேச்சாளரைப் போலப் பேசிக்கொண்டிருக்கிறார்," என்று அவர் கூறினார்.

"பாஜகவுடன் கூட்டணி அமைத்த பலருக்கும் என்ன நேர்ந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நேரப் போகிறது என்பதையும் நாம் பார்க்கதான் போகிறோம். பிகாரின் முதல்வராகப் பலமுறை பதவி வகித்த நிதிஷ்குமார், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அதேபோல, அமித் ஷா நினைத்தால், எடப்பாடி பழனிசாமியை எந்தவொரு மாநிலத்திற்கும் ஆளுநராக அனுப்பிவிட முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

அதிமுக-பாஜக கூட்டணி "தமிழகத்திற்குத் துரோகம் இழைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது" என்று குற்றம் சாட்டிய கனிமொழி, "எதிர்க்கட்சிக் கூட்டணியின் பின்னணியில் இயங்கும் உண்மையான சக்தி பாஜக. எடப்பாடியார் அதன் தலைமைக்கு அடிபணிந்து நடக்கிறார். அமித் ஷா அதிமுகவை முற்றிலுமாகத் தன் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்துள்ளார்... வேலைவாய்ப்புகள் மற்றும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் அனைத்தும், கள எதார்த்தங்களைக் கருத்தில் கொள்ளாமலேயே தில்லியிலிருந்து எடுக்கப்படுகின்றன," என்று அவர் குற்றம் சாட்டினார்.

பணமதிப்பிழப்பு, கரோனா பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர், கல்வி நிதி, 100 நாள் வேலை திட்டம் என அனைத்திலும் நம் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பாஜக அரசுக்கும், அதனுடன் கைகோர்த்து நிற்கும் அதிமுகவுக்குப் பாடம்புகட்ட வேண்டிய தேர்தல் இது. வரும் தேர்தலில் வீழ்த்திடுவோம். தமிழ்நாட்டை உயர்த்திடுவோம்.

இந்தத் தேர்தலில் வெறுப்புவாத அரசியல் செய்ய துடிக்கும் பாஜகவையும், சாமரம் வீசும் அதிமுகவையும் தமிழக மக்கள் முற்றிலும் நிராகரித்து அவர்களுக்கான பாடத்தைக் கற்பிப்பிக்க வேண்டும். இந்தத் தேர்தல் திமுகவிற்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்டிஏ), தமிழகத்திற்கும், தில்லிக்கும் இடையிலான ஒரு தேர்தல். தமிழர்களின் தாய்மண்ணாகத் திகழும் கீழடி மற்றும் நாக்பூர் ஆகியவற்றுக்கான ஒரு தேர்தல் என்பதை வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், சென்னையில் அமைந்திருப்பதைப் போலவே ஈரோட்டிலும் ஒரு 'செம்மொழிப் பூங்கா' அமைக்கப்படும்; ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அரசு மருத்துவமனை முதல் திண்டல் வரையிலான பகுதியில் ஒரு புதிய மேம்பாலமும் கட்டப்படும் .

எனவே, வாக்காளர்கள் தமிழ்நாட்டை கைப்பற்ற பார்க்கும் பாஜக - அதிமுக துரோக கூட்டணியின் சூழ்ச்சிகளை முறியடித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை மீண்டும் வெற்றி பெறச் செய்வோம் என்று அவர் கூறினார்.

தமிழத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 11:29 AM
summary

DMK leader Kanimozhi Karunanidhi on Thursday hit out at Leader of Opposition in Tamil Nadu assembly Edappadi Palaniswami and said "election fear and fever have continued to haunt him".

Updated On : 10 ஏப்ரல், 2026 at 11:34 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.