சூடம்மாள் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி
சூடம்மாள் அம்மன் சிலை மீது சூரிய ஒளிக் கதிர்கள் படும் அபூர்வ காட்சி குறித்து...
சின்னமனூர் அருகே உள்ள சூடம்மாள் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அம்மன் சிலை மீது சூரிய ஒளிக் கதிர்கள் படும் அபூா்வ நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், சின்ணமனூர் அடுத்த மூர்த்தி நாயக்கன்பட்டி சூடம்மாள் அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அம்மன் சிலை மீது சூரிய ஒளிக் கதிா்கள் படும் அபூா்வ நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில், திங்கள்கிழமை (ஏப். 27) காலை கருவறை அம்மன் சிலை மீது சூரிய ஒளிக் கதிா்கள் படும் அபூா்வ நிகழ்வு நடைபெற்றது. முதலில் அம்மன் சிலையின் உச்சியில் பட்ட சூரிய ஒளிக் கதிா்கள் படிப்படியாக நகர்ந்து கால் பாதம் வரை வந்து மறைய ஆரம்பித்தது.
Advertisement
இந்த அபூர்வ நிகழ்வில் அம்மன் சிலை பிரகாசமாக காட்சியளித்ததை அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனா்.
இந்த நிகழ்வின்போது பக்தர்கள் தங்களது வேண்டுதலை பக்தியுடன் முன் வைத்தனர்.
தமிழ்நாட்டில் இதுபோன்ற அபூர்வ கோயில்கள் நிறைய இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே, கட்டட கலை நிபுணர்கள் ஆகம விதிப்படி இதுபோன்ற தனித்துவமான கோயில்களை கட்டியுள்ளனர்.