வேலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது தீடீரென தீப்பற்றி எரிந்த கார்: உயிர்தப்பிய தம்பதி!
வேலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்படித்து எரிந்தது குறித்து...
வேலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்படித்து எரிந்ததில் நல்வாய்ப்பாக காரில் இருந்த தம்பதியினர் உயிர்தப்பினர். தகவறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்ரகள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (33). டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவியுடன் சாப்பிடுவதற்காக வேலூர் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே உள்ள காமராஜர் சிலை பகுதியை கார் கடக்கும் போது காரின் முன் பகுதியில் புகை எழுந்த நிலையில், திடீரென காரின் முன் பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது.
இதையடுத்து செய்வதறியாது தவித்த தமீம் அன்சாரி காரை சாலையிலேயே விட்டுவிட்டு நல்வாய்ப்பாக காரில் இருந்து மனைவியை பத்திரமாக மீட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து காரை அப்புறப்படுத்தினர்.
மேலும், இந்த தீ விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Car suddenly catches fire while driving on the road in Vellore. Couple survives...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.