பொறியியல் படிப்புகள் 1.82 லட்சம் மாணவா்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்!
பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளை பெறுவதற்கான கலந்தாய்விற்கு 1,82,345 மாணவா்கள் விண்ணப்பித்திருப்பது தொடர்பாக...
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளை பெறுவதற்கான கலந்தாய்விற்குக் கடந்த 15 நாள்களாக 1,82,345 மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனா்.
இது குறித்த தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்கக புள்ளிவிவரங்கள்:
தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை. , கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு இணைய வழியாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
கடந்த மே 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பப் பதிவுகள் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் மே 19 ஆம் தேதி வரை 1,82,345 மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா். இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், மே 9 ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும் பதிவானது.
கடந்த 15 நாள்களாக 1,09,137 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 68,783 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றமும் செய்துள்ள நிறைவு செய்துள்ளனா்.
அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் மதிப்பெண்கள் மாணவா்கள் குறைவாக எடுத்துள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் நிகழாண்டு கட்-ஆப் மதிப்பெண்கள் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு வரும் ஜூன் 2 ஆம் தேதி வரை தொடரும். நிலைமையைப் பொருத்து தேதி மேலும் நீட்டிக்கப்படலாம்.
Regarding the 182,345 students who have applied for counseling to secure government quota seats in engineering colleges...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.