வாய் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி சூப்!
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு,
மணத்தக்காளி சூப்
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - 1 கட்டு
பாசிப் பருப்பு -100 கிராம்
தக்காளி - 1
வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
மிளகு - சிறிது
சீரகம் - சிறிது
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வாணலியில் சேர்த்து பின் மிளகு, சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அரைத்துக் கொள்ளவும். பாசிப்பயிறை வேகவைத்து மசித்து கீரையுடன் சேர்த்து கொதிக்க விட்டு உப்பு சேர்த்து பரிமாறவும். மணத்தக்காளி சூப் ரெடி.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.