முகப்பு
செய்திகள்

நினைவுத் திறனை அதிகரிக்க, மனச்சோர்வைக் குறைக்க...

கீரைகளில் ஒவ்வொன்றும் தனித்துவ தன்மை கொண்டது. அதில் வல்லாரைக் கீரை என்று கூறினாலே நமக்கு நினைவுக்கு வருவது நினைவாற்றல் தான்.

Updated On : 16 அக்டோபர் 2020, 1:41 pm IST
வல்லாரை கீரை (கோப்புப்படம்)
பகிர்:

கீரைகளில் ஒவ்வொன்றும் தனித்துவ தன்மை கொண்டது. அதில் வல்லாரை கீரை என்று கூறினாலே நமக்கு நினைவுக்கு வருவது நினைவாற்றல் தான். ஆம், மூளையின் துரித செயல்பாட்டுக்கு, நினைவுத் திறனுக்கு வல்லாரை கீரை பெரிதும் பயன்படுகிறது. 

வல்லாரை கீரையின் குறிப்பிடத்தக்க மருத்துவ பயன்கள் என்னவென்பதை பார்க்கலாம். 

பொதுவாக நீர்ப்பரப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் எளிதாக படர்ந்து வளரும் வல்லாரை கீரையை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூளையின் உள்ள நரம்புகளின் செயல்பாட்டினைத் தூண்டி நினைவுத் திறனை மேம்படுத்தும். இதனால் அல்சைமர் நோய் வருவதைத் தடுக்க முடியும். 

Advertisement

Advertisement

மேலும், வல்லாரைக் கீரையை தொடர்ந்து உண்பதால் மனச்சோர்வு, மன அழுத்தம் குறையும்.

வல்லாரை இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசி வர எளிதில் ஆறும். யானைக்கால் வியாதி இருப்பவர்கள் வல்லாரை இலையை அரைத்து போட்டு வர வலி குறையும்.

மேலும், வல்லாரை உடல் வெப்பத்தைக் குறைக்கும். உடல் பலம் பெறும். அனைத்துவிதமான வயிற்றுக்கோளாறுகளை நீக்க வல்லாரை பயனப்டுகிறது. இதனால் செரிமானம் சீராக நடைபெறும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வல்லாரை பொடியுடன் நாட்டுச் சக்கரை அல்லது தேன் கலந்து சாப்பிடலாம். 

மாதவிடாய்க் காலத்தில் வல்லாரைச் சாற்றுடன் வெந்தயத்தை குழைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு வலி, இடுப்பு வலி குறையும். 

வல்லாரை இலைச் சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் ஞாபகசக்தி, சுறுசுறுப்பு கூடும்.

கண் எரிச்சல், கண் கோளாறுகளுக்கும் வல்லாரை சிறந்தது. சருமப் பிரச்னை, உடலில் புண் இருப்பவர்களும் வல்லாரை கீரையை அரைத்துப் பற்று போட விரைவில் சரியாகிவிடும். 

ஆனால், உடலுக்கு நல்லது என்று கூறி வல்லாரை கீரையை அதிகளவு எடுத்துக்கொள்ளக் கூடாது. மூளையில் உள்ள செல்களை அதிகம் தூண்டும் திறன் கொண்டதால் வலிப்பு நோய் உள்ளவர்கள் வல்லாரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments