முகப்பு
செய்திகள்

பாடி லோஷன் - எப்படி பயன்படுத்த வேண்டும்?

சாதாரணமாகவே சிலருக்கு எந்நேரமும் சரும வறட்சி இருக்கும். அதிலும் கோடை காலத்தில் உடலில் நீரேற்றம் குறைந்து உடல் முழுவதுமே பெரும்பாலானோருக்கு வறட்சியாகக் காணப்படும். 

Updated On : 30 ஏப்ரல் 2022, 2:55 pm IST
பகிர்:

சாதாரணமாகவே சிலருக்கு எந்நேரமும் சரும வறட்சி இருக்கும். அதிலும் கோடை காலத்தில் உடலில் நீரேற்றம் குறைந்து உடல் முழுவதுமே பெரும்பாலானோருக்கு வறட்சியாகக் காணப்படும். 

இந்த சூழ்நிலையில் உடல் வறட்சியைத் தடுக்கவும் சருமப் பாதுகாப்புக்கும் பாடி லோஷன்(உடலில் தடவும் திரவம்/கிரீம்) பயன்படுத்துவது அவசியம். பெண்கள் அதிகமாக இதனை பயன்படுத்தினாலும் சிலர் சரியான முறையில் அதனை உபயோகிப்பதில்லை. 

பாடி லோஷன் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

Advertisement

Advertisement

♦அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடி லோஷன் பயன்படுத்தலாம். 

♦மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தண்ணீர் போன்று இருக்கக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்த வேண்டும். 

♦எண்ணெய் சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை பாடி லோஷன்களை பயன்படுத்தலாம். 

♦ அடுத்ததாக உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை ரசாயனம் கலக்காத தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு செய்யக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்துங்கள். 

♦குளித்தவுடனேயே உடல் முழுவதும் பாடி லோஷனை அப்ளை செய்ய வேண்டும். ஈரப்பதம் இருக்கும்போது போட்டால் நன்றாக உறிஞ்சி உடல் வறண்டு போகாமல் தடுக்கும். 

♦ முதலில் கீழிருந்து அதாவது காலில் இருந்து தொடங்கி உடல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். முழங்கை, கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் தேய்ப்பதே சரியான முறையாகும். 

♦கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சரிசெய்ய பாடி லோஷன் அவசியமான ஒன்றுதான். முடிந்தவரை இயற்கை முறையில் இயற்கையான பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments