‘தினமணியும் நானும்’ - தினமணியுடனான உங்களது அனுபவங்களைப் பகிர ஒரு வாய்ப்பு!
தினமணியுடனான உங்களது பயணத்தை சுவையான அனுபவங்களாக நீங்கள் எங்களுடன் dinamani.readers@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
வாசக அனுபந்தம்
தினமணி இன்று 85 வது பிறந்தநாள். 1934 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட காலம் தொட்டு தினமணி கடந்து வந்த பாதை மிக அற்புதமானது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே துவங்கிய தினமணியின் பயணம் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமல்படுத்திய எமர்ஜென்சி காலத்தில் அதன் பூரணத்துவத்தை எய்தியது எனலாம். அதிகாரத்திற்கு எதிரான அத்தனை குரல்களும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்ட அந்நாட்களில் தினமணி அதைக் கண்டு அஞ்சியிருக்கவில்லை. தனது பத்திரிகைச் சுதந்திரத்தை கைவிடாது அன்று தமிழகத்தின் கடைக்கோடி வாசகருக்கும் நாட்டின் உண்மையான நிலையைப் பிரகடனப் படுத்தி தனது தீரத்தை வெளிக்காட்டியதை சரித்திரம் மறக்காது.
தலைமுறைகள் தாண்டியும் மாளாத பொலிவுடன் காலத்திற்கேற்ப தனது வடிவில் மட்டுமே மாற்றங்களை ஏற்றுக் கொண்டு பீடு நடை போடும் தினமணிக்கு அன்றும் இன்றும் என்றென்றுமாக நிரந்தர வாசகர்கள் உண்டு.
பலமுறை நேரிலும், தொலைபேசியிலுமாக தினமணியுடனான தங்களது வாசக பந்தத்தை அவர்கள் பகிர்ந்து கொள்ளத் தவறியது இல்லை. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. இன்று 85 வது பிறந்தநாள் கொண்டாடும் தினமணியுடனான உங்களது பயணத்தையும் மன நெருக்கத்தை சுவையான அனுபவங்களாக நீங்கள் எங்களுடன் dinamani.readers@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாகப் பகிர்ந்து கொள்ளலாம். பகிரும் வாசகர்கள் அனைவரது பொன்னான அனுபவங்களையும் தினமணி இணையதளத்தில் வெளியிடுவதில் தினமணி பெருமை கொள்கிறது.
Advertisement
Advertisement
‘தினமணியும் நானும்’ பகுதிக்கு அனுபவங்களை அனுப்பும் வாசகர்கள் மேலே உள்ள முகப்புப் புகைப்படத்தை போலவே உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமாக தினமணியுடன் நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணைத்து அனுப்பினால் உங்கள் அனுபவங்களுக்கு மேலும் சுவை கூடும். ஆர்வமுள்ளவர்கள் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : dinamani.readers@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.