கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,965 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 76.98 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மோகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிர காவல்துறையில் இதுவரை 15,591 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 158 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,990 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றுப் பரவலில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 4.80 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதித்திருக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..
நாட்டில் ஒரு நாளில் கரோனா பாதித்து பலியானோரின் எண்ணிக்கையில் ஐந்து மாநிலங்களில் மட்டும் 65% மரணங்கள் நிகழ்ந்திருப்பதை மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஒருவேளை அனைவருமே முகக்கவசம் அணிந்தால், நாடு முழுவதும் 90% பொது முடக்கம் அமல்படுத்துவதால் அடையும் இலக்கை பெற முடியும் என்று மருத்துவர் டி. நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 1,20,820 பேர் (88%) குணமடைந்துள்ளனர். 13,107 பேர் அதாவது 10% பேர் சிகிச்சையில் உள்ளனர். விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு..
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.56 கோடியை எட்டியது. இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.54 லட்சமாக உள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 37 லட்சத்தை நெருங்குகிறது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பில் கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களில் மட்டும் 43% கரோனா நோயாளிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழக மக்களின் சிரமங்களைக் கருத்தில்கொண்டு, அதிக அளவு தளா்வுகளை அரசு அறிவித்துள்ளபோதிலும் கரோனா தொற்று பாதுகாப்பு விஷயத்தில் அனைவரும் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் என மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா். விரிவான செய்திக்கு..
கரோனா நோய்த்தொற்று காரணமாக அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க அறிவிப்புகளால் இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் 23.9 சதவீத பின்னடைவை சந்தித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களை ராணுவ தியாகிகளுக்கு இணையாக கருதுவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,844 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,928 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.1, செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 96 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..