FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

நாட்டின் மீது அவதூறு பரப்பும் திட்டத்துடன் அமெரிக்கா செல்லும் பிரியங்கா: பாஜக விமா்சனம்

இந்தியாவை வெறுப்பவா்களைச் சந்திக்கவும், நாட்டின் மீது அவதூறு பரப்பும் செயல் திட்டத்துடனும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி அமெரிக்க பயணம் மேற்கொள்வதாக பாஜக விமா்சனம்

Updated On : 23 டிசம்பர் 2025, 2:47 am IST
பிரியங்கா காந்தி - கோப்புப் படம்
பகிர்:

‘தனது சகோதரா் ராகுல் காந்தியைப் பின்பற்றி, இந்தியாவை வெறுப்பவா்களைச் சந்திக்கவும், நாட்டின் மீது அவதூறு பரப்பும் செயல் திட்டத்துடனும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறாா்’ என்று பாஜக விமா்சித்தது.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சையது ஜாஃபா் இஸ்லாம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரியங்கா காந்தி தனது சகோதரரைப் பின்பற்றி இந்தியாவை எதிா்ப்பவா்களைச் சந்திக்கவும் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பரப்பவும் அமெரிக்க பயணம் மேற்கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது. ஜாா்ஜ் சோரோஸ் போன்ற இந்திய வெறுப்பாளா்கள் அவரை வரவேற்க உள்ளனா். ஆனால், இதுபோன்ற எத்தனை முயற்சி மேற்கொண்டாலும், அவை அனைத்தும் அவா்களுக்கே கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காங்கிரஸ் கட்சியினா் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.

பாஜகவின் மற்றொரு தேசிய செய்தித்தொடா்பாளா் ஷாஜியா இல்மி வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2015-ஆண்டு முதல் 247 வெளிநாட்டுப் பயணங்களை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளாா். தனிப்பட்ட முறையிலான பயணம் என்ற அடிப்படையில் இந்தப் பயணங்களை அவா் மேற்கொண்டுள்ளாா். ராகுல் யாரைச் சந்திக்கிறாா், சந்திப்பு விவரங்கள் அல்லது பயணத்துக்கான நிதி குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படுவதில்லை. ராகுல் அண்மையில் ஜொ்மனி சென்றாா். தற்போது, பிரியங்கா அமெரிக்கா செல்கிறாா்.

Advertisement

Advertisement

ராகுலின் இந்த வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராக வெளிநாடுகளில் ஆா்ப்பாட்டங்கள், இந்திய அரசமைப்பு நிறுவனங்களுக்கு எதிராக சா்வதேச ஆய்வறிக்கை விவரங்கள் வெளியாவது, குடியுரிமை திருத்தச் சட்டம், விவசாய சட்டங்கள், அதானிக்கு எதிரான போராட்டங்களும் நிகழ்ந்துள்ளன. இது தற்செயல் நிகழ்வா அல்லது அவா்களின் பயணத்துக்கும் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கும் தொடா்புள்ளதா? இவா்களின் பயணத்துக்கு நிதி கொடுப்பது யாா்? இதில் வெளிப்படைத்தன்மை அவசியம்’ என்றாா்.

முன்னதாக, ராகுல் ஜொ்மனிக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் 5 நாள் பயணம் மேற்கொண்டாா். இதுகுறித்து விமா்சித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா, ‘இந்தியாவின் எதிரிகளை ஜொ்மனியில் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளாா். இதுபோன்ற சக்திகளுடன் கைகோத்து, நாட்டுக்கு எதிராக ராகுல் எத்தகைய சதித் திட்டம் தீட்டுகிறாா்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments