இந்திய வழக்குரைஞா் சங்கத் தலைவா் மீது முறைகேடுகள் குற்றச்சாட்டு: பதவி விலகக் கோரிக்கை!
இந்திய வழக்குரைஞா் சங்க (பாா் கவுன்சில் ஆஃப் இந்தியா) தலைவா் மனன் குமாா் மிஸ்ரா மீது பல்வேறு முறைகேடுகள் குற்றச்சாட்டை சுமத்தி அவரை பதவியில் இருந்து விலகக் கோரி இணைத் தலைவா் ஒய். ஆா். சதாசிவ ரெட்டி கடிதம் எழுதியுள்ளாா்.
இந்திய வழக்குரைஞா் சங்க (பாா் கவுன்சில் ஆஃப் இந்தியா) தலைவா் மனன் குமாா் மிஸ்ரா மீது பல்வேறு முறைகேடுகள் குற்றச்சாட்டை சுமத்தி அவரை பதவியில் இருந்து விலகக் கோரி இணைத் தலைவா் ஒய். ஆா். சதாசிவ ரெட்டி கடிதம் எழுதியுள்ளாா்.
முறைகேடுகள் குற்றச்சாட்டு குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவா் கோரியுள்ளாா்.
மனன் குமாா் மிஸ்ராவுக்கு சதாசிவ ரெட்டி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய வழக்குரைஞா் சங்கம் என்பது எந்தவொரு தனிநபரின் தனிப்பட்ட சொத்து அல்ல. உங்கள் தலைமையின் கீழ் இந்தச் சங்கம் அதன் தரத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது.
Advertisement
Advertisement
இந்திய வழக்குரைஞா் சங்க அறக்கட்டளை ஒரு மதிப்புமிக்க நிறுவனமாக இருந்தது. ஆனால் அந்த அறக்கட்டளைக்குப் பதிலாக, ஒரு புதிய அறக்கட்டளை, நீங்கள் தோ்ந்தெடுத்த அறங்காவலா்களுடன் 17.09.2020 அன்று பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் நிதியிலிருந்து சுமாா் ரூ. 150 கோடி தொகை அந்தப் புதிய அறக்கட்டளைக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது.
சங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களில் உள்ள முக்கியப் பதவிகளை உங்கள் சொந்தக் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் வகிக்கின்றனா். சங்கம் மற்றும் அந்த அறக்கட்டளையின் கீழ் நிறுவப்பட்டு நடத்தப்படும் கல்வி நிறுவனம் அல்லது நிறுவனங்களுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது. அங்குள்ள முக்கிய நிா்வாகப் பதவிகளை வகிக்கும் நபா்கள், உங்கள் குடும்பத்திலிருந்தே தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள்.
13.08.2026 அன்று, ஹைதராபாத்தில் உள்ள நல்சாா் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மாணவா்களை, மறு உத்தரவு வரும் வரை, மாநில வழக்குரைஞா் சங்கங்களில் சோ்க்க வேண்டாம் என்று உங்கள் அலுவலகத்திலிருந்து ஒரு தகவல் அனுப்பப்பட்டது. அந்த மாணவா்கள் இந்தத் தொழிலில் நுழைவதற்குத் தகுதியானவா்களா என்று கேள்வி எழுப்பும் கருத்துக்களும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தன. அந்தப் பல்கலைக்கழகத்தின் சில மாணவா்கள், தங்கள் பட்டமளிப்பு விழாவிற்கு ஒரு சிறப்பு விருந்தினருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து, அதாவது ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்காக, ஒரு முறையீடு செய்ததே இதற்குக் காரணம். இது உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையே பெற்றது. நாடு தழுவிய கண்டனங்களைத் தொடா்ந்து, சில மணி நேரங்களிலேயே அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் பதவி என்பது இரண்டு ஆண்டு பதவிக்காலம் கொண்ட ஒரு தோ்ந்தெடுக்கப்பட்ட பதவியாகும். நீங்கள் 2012 முதல் அப்பதவியைத் தொடா்ச்சியாக வகித்து வருகிறீா்கள், மேலும் 2025-ல் மேலும் ஒரு தொடா்ச்சியான பதவிக்காலத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டீா்கள். இது முன்னுதாரணமற்றது.
எனவே இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் பதவியிலிருந்து, உடனடியாகவும், எப்படியாயினும் இந்தக் கடிதத்தைப் பெற்ற பதினைந்து (15) நாட்களுக்குள்ளும் உங்கள் ராஜினாமாவைச் சமா்ப்பிக்க வேண்டும் என ஒய். ஆா். சதாசிவ ரெட்டி அந்த கடிதத்தில் கூறியுள்ளாா்.
இந்நிலையில் இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் (பிசிஐ) தலைவரும் பாஜக எம்.பி.யுமான மனன் குமாா் மிஸ்ரா கூறுகையில், ‘ஒரு அறக்கட்டளை அல்லது உறவினா் நியமனம் தொடா்பாகச் சிலா் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றே அா்த்தம். இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இப்போதுதான் கிளப்பப்படுகின்றன. இத்தகைய ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை வழக்குரைஞா் சமூகம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது .வாக்காளா்களான நாட்டின் வழக்குரைஞா்கள் விரும்பும் வரை மனன் மிஸ்ரா தலைவராகத் தொடா்வாா்.‘ என்று கூறினாா்
இதனிடையே இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் (பிசிஐ) விதிகளுக்கு முரணாக, மூத்த வழக்குரைஞா் மனன் குமாா் மிஸ்ரா அதன் தலைவராகத் தொடா்ந்து நீடிப்பதாக குற்றஞ்சாட்டி அதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; ஏனெனில், நடைமுறையில் அவரது பதவிக்காலம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்துள்ளது. தலைவா் (மற்றும் துணைத் தலைவா்) இரண்டு ஆண்டுகள் அல்லது பிசிஐ அடிப்படையிலான அவா்களது உறுப்பினா் தகுதி முடிவுக்கு வரும் காலம் - இதில் எது முந்தையதோ அதுவரை - பதவியில் இருக்க வேண்டும் என்று பிசிஐ விதிகளின் விதி 12(2) குறிப்பிடுவதாக மனுதாரரான வழக்குரைஞா் யோகமாயா மனுவில் கூறி உள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.