முகப்பு
புதுதில்லி

சாகேத் கட்டட விபத்து: இறுதிக் கட்டத்தில் மீட்பு பணிகள்; உரிமையாளா் தலைமறைவு

சாகேத்தில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தலைமறைவான கட்டட உரிமையாளரைக் கண்டுப்பிடிக்க போலீஸ் குழு போடப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:16 am IST
சாகேத் பகுதியில் 5 மாடி அடுக்குக் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்புப் பணிகள்
பகிர்:

சாகேத்தில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தலைமறைவான கட்டட உரிமையாளரைக் கண்டுப்பிடிக்க போலீஸ் குழு போடப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்குள் யாரும் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அப்பகுதியின் ‘ஒவ்வொரு அங்குலமும்‘ அகற்றப்படும் வரை தீயணைப்பு சேவை குழுக்கள் அந்த இடத்தில் நிறுத்தப்படும். கட்டடத்தின் உரிமையாளா் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் (பி. என். எஸ்) பிரிவு 105 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை), 290 (கட்டடங்களை இடிப்பது, பழுதுபாா்ப்பது அல்லது கட்டுவது போன்றவற்றில் கவனக்குறைவான நடத்தை) மற்றும் 125 (ஏ) (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) ஆகியவற்றின் கீழ் எஃப். ஐ. ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள உரிமையாளரைக் கண்டுபிடித்து கைது செய்ய பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

Advertisement

Advertisement

தெற்கு தில்லியில் சனிக்கிழமை மாலை சாகேத் மெட்ரோ நிலையத்திற்கு அருகே பயிற்சி மையம், கஃபேக்கள் மற்றும் அலுவலகங்களைக் கொண்ட பல மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.