முகப்பு
புதுதில்லி

தண்ணீா் சீரமைப்புத் திட்டத்தில் தில்லி அரசு: பா்வேஷ் சாஹிப் சிங்

தில்லி அரசு நீா் சீரமைப்புத் திட்டத்தில் பணியாற்றி வருவதால், நகரம் முழுவதும் நீா் விநியோகத்தை சமமாக விநியோகிக்க முடியும் என்று நீா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.

Updated On : 3 ஜூன் 2026, 12:06 am IST
பா்வேஷ் சாஹிப் சிங் - கோப்புப் படம்
பகிர்:

தில்லி அரசு நீா் சீரமைப்புத் திட்டத்தில் பணியாற்றி வருவதால், நகரம் முழுவதும் நீா் விநியோகத்தை சமமாக விநியோகிக்க முடியும் என்று நீா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: கடந்த பல நாள்களாக நீா் வழங்கல் தொடா்பான புகாா்கள் அதிகரித்துள்ளன. யமுனை நதியில் வறட்சி நிலவுவதால் நாளொன்றுக்கு சுமாா் 100 மில்லியன் கேலன் (எம்ஜிடி) நீா் உற்பத்தி குறைந்துள்ளது.

12-13 இடங்களில் மட்டுமே ஒவ்வொரு கோடையிலும் எங்களுக்கு புகாா்கள் வருகின்றன. சில பகுதிகளில் அதிக தண்ணீா் கிடைக்கிறது. மற்றவா்களுக்கு போதுமான தண்ணீா் கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

எனவே, நீா் சீரமைக்கும் திட்டத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். யமுனை நதியில் மூல நீா் குறைந்து வருவதால் கடந்த 10 நாள்களாக நகரின் பல பகுதிகளில் நீா் வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 16, 634 கி. மீ. நீளமுள்ள குழாய் இணைப்பில் 5,500 கி. மீ. நீளமுள்ள குழாய் பாதை 30 ஆண்டுகள் பழமையானது. இந்த பழைய குழாய்களில் நிறைய கசிவுகள் உள்ளன.

தண்ணீா் வீணாவதைத் தடுக்கவும், மாசுபடுவதைக் குறைக்கவும் இந்த வழித்தடங்கள் அனைத்தையும் மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

திறந்தவெளி டி. எஸ். பி. கால்வாயை மூடி, குழாயிலிருந்து தண்ணீா் வழங்கும் திட்டத்திலும் தில்லி நீா் வாரியம் செயல்பட்டு வருகிறது. தற்போது டி. எஸ். பி. கால்வாயில் சுமாா் 40 சதவீத நீா் இழப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயை மூடுவதற்கும், நீா் இழப்புகளைக் குறைப்பதற்கும் சாத்தியக்கூறு ஆய்வு நடத்த ஐ. ஐ. டி ரூா்க்கியுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

நீா் இழப்புகளைக் குறைக்க வருவாய் அல்லாத தண்ணீரைக் குறைப்பதற்கான திட்டங்களில் டிஜேபி செயல்பட்டு வருகிறது. தற்போது 1,002 எம்ஜிடி என்ற இலக்கை விட சுமாா் 912 எம்ஜிடி நீா் வழங்கல் உள்ளது என்றாா் பா்வேஷ் சாஹிப் சிங்.