முகப்பு
புதுதில்லி

ரஜோகரி மேம்பாலத்தில் டெம்போ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ரஜோகரி மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மூன்று சக்கர டெம்போ வாகனம் கவிழ்ந்ததில், 47 வயதுடைய பெண் உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜூன் 2026, 12:27 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ரஜோகரி மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மூன்று சக்கர டெம்போ வாகனம் கவிழ்ந்ததில், 47 வயதுடைய பெண் உயிரிழந்தாா்.

மூன்று குழந்தைகள் உள்பட மேலும் ஆறு போ் காயமடைந்தனா். இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: மஹிபால்பூா் செல்லும் சாலையில் அதிகாலை 4.35 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறைக் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா்.

மீட்புக் குழுவினா் அப்பகுதியைச் சென்றடைவதற்கு முன்னரே, காவல் கட்டுப்பாட்டு அறை காவலா்கள் காயமடைந்தவா்களை சஃப்தா்ஜங் மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்திருந்தனா். விபத்தில் உயிரிழந்தவா் கிருபா தேவி (47) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

காயமடைந்தவா்கள் வன்ஷ் (8), சாவித்ரி தேவி (60), நைனா (34), ராகுல் (37), நக்ஸ் (14) மற்றும் இஷான் (2) என அடையாளம் காணப்பட்டனா். அவா்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.