முகப்பு
நூல் அரங்கம்

அருணகிரிநாதரின் திருப்புகழ் (மூலம் முழுவதும்)

சந்த நயத்துடனும் பக்தி சிரத்தையுடனும் வாசிக்கும்போது திருப்புகழ் ஒரு ராஜ மந்திரம் என்பதை உணரலாம்.

Updated On : 8 ஜூன் 2026, 5:20 pm IST
பகிர்:

அருணகிரிநாதரின் திருப்புகழ் (மூலம் முழுவதும்)- பக். 1072; ரூ. 700; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை- 600 049, ✆ 044- 2650 7131.

திருப்புகழ் என்பது சந்தக் கடல்; அதன் சிறப்பே அதன் சந்த நயம்தான். 'இந்த எளியேன் எப்படிப் பாடுவேன் எனக்கென்ன தெரியும்' என திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் மறுக்க, முருகனால் சந்தம் எடுத்துக்கொடுக்கப்பட்டு 'முத்தைத்திரு' என்று பாட ஆரம்பிக்கிறார். சந்தம் கடல்போல் அலையலையாய் வந்து விழ அதே நயத்துடன் சுமார் 1300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடுகிறார்.

திருப்புகழின் நோக்கம் பக்தியை வளர்ப்பது மட்டுமல்ல, மனிதனின் மனத்தில் இருக்கும் மும்மலத்தை அகற்றி, அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற நியதியை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. பாடல்கள் அனைத்தையும் அதன் ராக- தாள வகைகளுடன் பதிப்பித்திருப்பதில் இந்தத் தொகுப்பு முழுமை பெறுகிறது.

Advertisement

Advertisement

அறுபடை வீடுகளுக்கு மட்டுமல்லாது, தமிழகத்தின் பல ஊர்களிலும், இலங்கை கதிர்காமத்தில் இருக்கும் முருகப்பெருமானுக்கும் என 200-க்கும் மேற்பட்ட முருகன் திருக்கோயில்களுக்குச் சென்று அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.

கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம் என ஒட்டுமொத்த தொகுப்பாகவும் வந்திருக்கிறது இந்தத் திருப்புகழ். சந்த நயத்துடனும் பக்தி சிரத்தையுடனும் வாசிக்கும்போது திருப்புகழ் ஒரு ராஜ மந்திரம் என்பதை உணரலாம்.

அருணகிரிநாதரின் நாவில் 'ஓம்' என முருகர் எழுதியதும் அவர் பாடியதால், ஆங்கிலத்தில் உச்சரிப்பை வளப்படுத்தும் பயிற்சிக்கான 'டங்க் ட்விஸ்ட்டர்' போல், 'நாச் சுழற்சி பயிற்சி'-க்கு ஏற்றதாக திருப்புகழ் இருப்பதாகச் சொல்லும் முருகனடியார்களின் கூற்றை மறுப்பதற்கில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.