முகப்பு
செய்திகள்

சனிக்கிழமையில் ஏன் பெருமாள் கோயிலுக்குச் செல்கிறோம் தெரியுமா?

பெருமாள் கோயில்களில் மற்ற நாட்களை விட சனிக்கிழமைகளில் மட்டும் கூட்டம் நிரம்பி வழிகிறது ஏன்னென்று..

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:39 AM
பகிர்:

பெருமாள் கோயில்களில் மற்ற நாட்களை விட சனிக்கிழமைகளில் மட்டும் கூட்டம் நிரம்பி வழிகிறது ஏன்னென்று தெரியுமா? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் அப்படி என்ன தொடர்பு? வாங்க பார்க்கலாம். 

சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்மராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கியபின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.

கங்கையை விட யாமுனா புனிதமான நதியென அனைவரும் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆகவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?”என்று கேட்டார். அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!”என்று கூறினார்.

மேலும் தகவல்கள் அறிய விடியோவை பாருங்கள்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.