முகப்பு
செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆனி வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (ஜூலை 11) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:29 AM
பகிர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (ஜூலை 11) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை  (ஜூலை 11) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.  இதை முன்னிட்டு அன்றைய தினம்  அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம்,  5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. 

காலை 9  மணிக்கு விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.  மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. அதே போல இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்மனுடன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →