ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் 
செய்திகள்

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

800 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

திருமால் அர்ச்சாவதார ரூபியாய் ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்தைக் கொண்டு அருள் புரியும் திருத்தலங்கள் விசேஷமாகக் கருதப்படுகிறது.

திருமகளை திருமார்பில் தரித்த காரணத்தால் அமைந்த திவ்யமான திருநாமம் ஸ்ரீநிவாஸன் என்பதாகும்.  அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வந்தவாசி அருகேயுள்ள ஓசூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் உள்ளது.

இந்தக் கிராமம் முன்பு பிரம்மபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. க்ருத யுகத்தில் படைப்புக் கடவுளான நான்முகன் இத்திருத்தலத்துக்கு வந்து பெரிய வேள்விகள் நடத்தியதால் "பிரம்மபுரம்'  என பெயர் அமைந்திருக்கலாம் என்கின்றது கர்ண பரம்பரையாகக் கூறப்பட்டுவரும் தல வரலாற்று தகவல்.

இந்தப் பகுதியைஆண்டுவந்த சம்புவராய மன்னர் ஒருவர் இத்தலத்துக்கு வந்து பெருமாளின் அழகில் மனம் பறிகொடுத்து இந்த ஊரை அந்தணர்களுக்குத் தானம் அளித்து நித்திய பூஜைகள் குறைவற நடத்திட உதவியதாகத் தெரிய வருகிறது. 

இவ்வூர் கோயிலுக்கு அருகில் காணப்படும் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு காலிங்கராயன் என்பவர், ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாட்டுக்காகத் தானம் அளித்த செய்தியை குறிப்பிடுகிறது. 

விஜயநகர காலத்து கோயில் கட்டட அமைப்பு, சன்னதி தெரு, வீதிகளின் தோற்றம்,  நடைபெற்றுவந்த பாரம்பரிய விழாக்கள் போன்றவை இத்தலத்தின் பழைமையை பறைசாற்றுகின்றன. 

இத்தலத்து பெருமாளின் திருமேனி அழகை பார்த்து ரசித்து கண்களால் பருக வேண்டும். அபயவரத ஹஸ்தத்துடன் சங்கு சக்கராதாரியாய் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவிமார்களுடன் காட்சியளிக்கும் எம்பெருமானின் திருமேனி அவ்வளவு செளந்தர்யம் வாய்ந்தது நினைவில் வைத்தால் கனவில் காட்சி தரும் ஸ்ரீநிவாஸப் பெருமாள் என்ற பெருமையுடன் பேசப்படும் வழக்கம் அக்காலத்தில் உண்டு.  மூலவருக்கு இணையாக உத்ஸவ விக்கிரகங்களும் அழகுற அமைந்துள்ளன.

அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சன்னதி உள்ளது.  உத்ஸவ மூர்த்திகளாக தாயார்,  விஷ்வக்úஸனர்,  சக்கரத்தாழ்வார்,  ஸ்ரீராமானுஜர்,  நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், சுவாமி வேதாந்த தேசிகர்,  அகோபில மடம்பட்டத்து முதல் அழகிய சிங்கர் ஸ்ரீஆதிவண் சடகோப ஜீயர் ஆகியோர்கள் சன்னதி கொண்டு அருளுவது சிறப்பு. இந்தப் பெருமாளை நினைத்தாலே நமக்கு அருள் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுலை பிரதமராக்குவதே பிரியங்காவின் குறிக்கோள்! டி.கே. சிவக்குமார்

ஸ்ரீநகரில் 1.25 லட்சம் குடும்பங்களுக்குத் தடையற்ற மின்சாரம்: உமர் அப்துல்லா

100 நாள் வேலை திட்டத்தின் காந்தியடிகள் பெயரை நீக்கியதை கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்!

ஆஷஸ் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்!

பாகிஸ்தான் வரை பிரபலமடைந்த சாரா அர்ஜுன்!

SCROLL FOR NEXT