FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சட்டம் : கவிஞர் இரா .இரவி 

6 ஆகஸ்ட் 2025, 5:46 pm IST
பகிர்:

மக்களுக்காக இயற்றப்படுவதே சட்டம்   
மனதில் கொள்ள வேண்டும் எல்லோரும் !

சட்டம் என்று சொல்லி பயமுறுத்தாதீர் 
சட்டம் மக்கள் நலன் காக்க வேண்டும் !

வெள்ளையனிடம் இருந்து விடுதலை எதற்கு ?
விரும்பியபடி ஏழைகள் மகிழ்வாக வாழ்வதற்கு !   

Advertisement

Advertisement

திடீரென சில சட்டங்கள் வருகின்றன 
தினமும் மக்களை வேதனையில் வீழ்த்துகின்றன !

அடக்குமுறைக்குப் பெயர்தான் சட்டமோ ?
அன்பாக உரைப்பதே உன்னதச் சட்டம் !

மக்களுக்கு நன்மை செய்வதே சட்டம்
மக்களை வதைப்பது சட்டம்அன்று !

பட்டுக்கோட்டையில் பாடல் வரிகள் 
பாவலன் என் நினைவிற்கு வந்தன !

சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்  தடுக்குது 
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடுது !

திருடனாய்ப் பார்த்து திருந்த வேண்டுமென்றார் 
திருடன்கள் திருந்துவதாகத் தெரியவில்லை !

சட்டம் என்பது நல்லாருக்கு ஆதரவாகவும் 
தீயோருக்கு எதிராகவும் இருக்க வேண்டும் !

நாட்டு நடப்போ எதிர்மாறாக உள்ளன 
நடக்கும் இக்கொடுமைகளை மாறிட வேண்டும் !

சட்டத்தின் ஓட்டையில் வெளியே வருகின்றனர் 
சட்டத்தை மீறுகிறான் தண்டிக்க முடியவில்லை !

அப்பாவி மக்களிடம் மட்டும்  நம்நாட்டு சட்டம் 
அவரமாகப் பாய்ந்து தண்டனை கொடுத்து மகிழும் !

இந்நிலை மாற வேண்டும் சட்டம் என்பது 
ஏழை மக்களை காக்க வேண்டும் அதுவே சிறப்பு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments