உன் குரல் கேட்டால் ! கவிஞர் இரா .இரவி !
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:36 PM
உன் குரல் கேட்டால் நான் திரும்பவும் உயிர்த்தெழுவேன் உயரம் தொடுவேன் !அலைபேசியில் ஒலி வரும்போதெல்லாம் அழைப்பது நீயோ என்று எடுப்பேன் !எடுக்கும் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமேஎனக்கு மிஞ்சியது ஏக்கமே எஞ்சியது !நான் உன்னை அழைத்துப் பேசலாமென்றால் நின் எண் என் வசம் இல்லை ஆனால் !உன்னிடம் உண்டு எனது எண்நீ நினைத்தால் ஒரே ஒரு முறை !மறக்க நினைத்தாலும் முடிவதில்லை மனதில் நினைவுகள் வந்து மோதுகின்றன !மூச்சு உள்ளவரை உன் நினைவு மூளையின் ஒரு ஓரத்தில் இருக்கும் !பசுமையான நினைவுகள் எனக்கு பகலிலும் வந்து போகின்றன !கல் நெஞ்சம் கேள்விப் பட்டதுண்டு கள்ளி உனக்கோ இரும்பு நெஞ்சம் !இரும்பு கூட தீயிலிட்டால் வளையும்என்னவளே நீ எப்போது வளைவாய் ! என்றாவது நீ அலைபேசியில் அழைப்பாய்என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு !இரக்கம் கொண்டு என்னை அழைக்கலாம்ஒரே ஒரு முறை அழைத்திடுவாய் !ஒரே ஒரு முறை உன் குரல் கேட்டால் உள்ளமும் உடலும் பூரிப்பு அடையும் !