FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கவிதைமணி

என்  முதல் கனவு ! கவிஞர் இரா .இரவி !

Updated On : 25 நவம்பர் 2017, 4:03 pm IST
பகிர்:

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் 
இனிய சமதரும சமுதாயம் என்  முதல் கனவு !

இருப்பவன் இல்லாதவன் என்ற நிலையின்றி 
ஏற்றத் தாழ்வுகள் இன்றி சமநிலை !

அடிப்படைத் தேவைகள் என்பதை 
அரசே  வழங்கி விடும் மக்களுக்கு !

Advertisement

Advertisement

தனியார் உடைமை எதுவுமின்றி 
தரணியில் பொதுவுடைமை வேண்டும் !

கோடிகளைப்  பதுக்குவோர் இல்லை 
கொடிகளுக்கு வேலை இல்லை !

செல்வக் கொழிப்பும் இல்லை 
செல்வாக்குகளும் இல்லை !

ஏழை பணக்காரன் இல்லை 
எல்லோருக்கும் சமநிலை !

மாட மாளிகையும் இல்லை 
ஓலைக் குடிசையும் இல்லை !

பசியும் பட்டினியும் இல்லை 
பணக்கார ஆணவம் இல்லை !

கந்து வட்டி இல்லவே இல்லை 
கொலை தற்கொலையும் இல்லை !

கல்வியிலும் ஏற்றத் தாழ்வு இல்லை 
கல்வி அனைவருக்கும் சமமாக !

சாதி மதம் இல்லவே இல்லை 
சாதி மத சண்டையும் இல்லை !

அனைவருக்கும் சம வாழ்வு 
அன்பு இருக்கும்  நிறைவாழ்வு  !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments