கால்பந்து : ஐ.சி.எஃப். சாம்பியன்
திருச்சி, மே 23: திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கிடையேயான கால்பந்து போட்டியில் சென்னை ஐ.சி.எஃப். அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் கோட்டங்களுக்கிடையேயான 23-வத
திருச்சி, மே 23: திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கிடையேயான கால்பந்து போட்டியில் சென்னை ஐ.சி.எஃப். அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் கோட்டங்களுக்கிடையேயான 23-வது கால்பந்து போட்டிகள் திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை பயிற்சி மைதானத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றன. இதில் ரயில்வே பாதுகாப்புப் படையின் திருச்சி, பாலக்காடு, திருவனந்தபுரம், ஐ.சி.எஃப்., சென்னை தெற்கு ரயில்வே ஆகிய 5 கோட்டங்களிலிருந்து கால்பந்து அணிகள் பங்கேற்றன. திருவனந்தபுரம் கோட்ட அணி தவிர, மற்ற நான்கு அணிகளும் அரையிறுதிக்குத் தேர்வு பெற்றன.
அரையிறுதி ஆட்டங்களில் திருச்சி அணியை ஐ.சி.எஃப். அணியும், சென்னை தெற்கு ரயில்வே அணியை பாலக்காடு அணியும் வென்றன. இறுதிப் போட்டியில் ஐ.சி.எஃப். அணி 5-1 என்ற கோல் கணக்கில் பாலக்காடு அணியை வென்றது. போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஐ.சி.எஃப். அணிக்கு தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் பி.வி. வைத்தியலிங்கம் கோப்பையை வழங்கிப் பாராட்டினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.