கால்பந்து : ஐ.சி.எஃப். சாம்பியன்
திருச்சி, மே 23: திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கிடையேயான கால்பந்து போட்டியில் சென்னை ஐ.சி.எஃப். அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் கோட்டங்களுக்கிடையேயான 23-வத
திருச்சி, மே 23: திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கிடையேயான கால்பந்து போட்டியில் சென்னை ஐ.சி.எஃப். அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் கோட்டங்களுக்கிடையேயான 23-வது கால்பந்து போட்டிகள் திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை பயிற்சி மைதானத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றன. இதில் ரயில்வே பாதுகாப்புப் படையின் திருச்சி, பாலக்காடு, திருவனந்தபுரம், ஐ.சி.எஃப்., சென்னை தெற்கு ரயில்வே ஆகிய 5 கோட்டங்களிலிருந்து கால்பந்து அணிகள் பங்கேற்றன. திருவனந்தபுரம் கோட்ட அணி தவிர, மற்ற நான்கு அணிகளும் அரையிறுதிக்குத் தேர்வு பெற்றன.
அரையிறுதி ஆட்டங்களில் திருச்சி அணியை ஐ.சி.எஃப். அணியும், சென்னை தெற்கு ரயில்வே அணியை பாலக்காடு அணியும் வென்றன. இறுதிப் போட்டியில் ஐ.சி.எஃப். அணி 5-1 என்ற கோல் கணக்கில் பாலக்காடு அணியை வென்றது. போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஐ.சி.எஃப். அணிக்கு தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் பி.வி. வைத்தியலிங்கம் கோப்பையை வழங்கிப் பாராட்டினார்.
Advertisement