இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பி.வி. சிந்து
சிங்கப்பூரில் நடைப்பெற்று வரும் ஒபன் பாட்மின்டன் போட்டியில் அரையிறுதியில் வெற்றிப்பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் பி.வி. சிந்து.
சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஓபன் பாட்மின்டன் போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து.
கடந்த மே மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக ஒரு போட்டியின் அரையிறுதிக்கு பி.வி. சிந்து முன்னேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் சிந்து, ஜப்பான் வீராங்கனை சேனா கவாகமியை எதிா்கொண்டு விளையாடினார். தொடக்கம் முதலே சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 21-15, 21-7 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுவரை சேனாவை மூன்று முறை சந்தித்திருக்கும் சிந்து மூன்றிலுமே வென்றிருக்கிறாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.