வாஷிங்டன் சுந்தர் படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் மெகா ஏலத்தில் வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

DIN

ஐபிஎல் மெகா ஏலத்தில் வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரை லக்னௌ அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில், இன்று (நவம்பர் 25) இரண்டாம் நாள் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

வாஷிங்டன் சுந்தர் தற்போது பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோதையாறு வனப் பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

SCROLL FOR NEXT