படம் | AP
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, அதன் வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்போடு உள்ளது. வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

ஜோஸ் ஹேசில்வுட் விலகல்

அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஜோஸ் ஹேசில்வுட்

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலிருந்து ஜோஸ் ஹேசில்வுட் விலகியுள்ளார். இருப்பினும், அடுத்தடுத்த போட்டிகளுக்கு தயாராவதற்காக அவர் அணியுடன் தொடர்ந்து இணைந்திருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஜோஸ் ஹேசில்வுட் விலகிய நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்காக வேகப் பந்துவீச்சாளர்களான சீன் அப்பாட் மற்றும் பிரண்டன் டாக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை முதல் முறையாக ஜோஸ் ஹேசில்வுட் தவறவிடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வானுக்கு வரம்...

நெஞ்சில் மணக்கும் நினைவுகள்...

இரவில் கல்லறைக்கு பிரியாணி ஆர்டர் செய்த பெண்! டெலிவரி செய்ய மறுப்பு!

ஒரு நூலகம் மறைந்துவிட்டது!: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

பள்ளிச்சட்டம்பி படத்தின் கயாது லோஹர் போஸ்டர்!

SCROLL FOR NEXT