FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வருண் சக்ரவர்த்தி விலகல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி விலகியுள்ளார்.

Updated On : 13 ஜூலை 2026, 7:44 pm IST
வருண் சக்ரவர்த்தி
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி விலகியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், நாளை (ஜூலை 14) முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு, இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான இந்திய அணியை அண்மையில் பிசிசிஐ அறிவித்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், காயம் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக அணியில் ரவி பிஷ்னோய் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது, வருண் சக்ரவர்த்தி அசௌகரியமாக உணர்ந்துள்ளார். அதன் பின், அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டதில் காயம் ஏற்பட்டது உறுதியானது. இதனையடுத்து, அவர் ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா (துணைக் கேப்டன்), இஷான் கிஷன், ஷிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, பிரின்ஸ் யாதவ், யஷ் தாக்குர், அசோக் சர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங், ரவி பிஷ்னோய்.

summary

Varun Chakravarthy has withdrawn from the T20 series against Zimbabwe due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments