முகப்பு
கிரிக்கெட்

ஆஸி. தலைமைப் பயிற்சியாளராக மெக்டொனால்டு 2027 வரை நீட்டிப்பு!

ஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்ட் 2027 வரை ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

Updated On : 30 அக்டோபர் 2024, 12:32 pm IST
ஆண்ட்ரூ மெக் டொனால்ட் - கோப்புப் படம்
பகிர்:

ஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்ட் 2027 வரை ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஜஸ்டின் லாங்கரிடமிருந்து 2022 முதல் ஆஸி.யின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு ஆண்ட்ரூ மெக்டொனால்டிம் ஒப்படைக்கப்பட்டது. இவருடையை தலைமையில் ஆஸி. அணி 2023இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பைகள் வென்றன.

ஆஸ்திரேலியாவுக்கு ஆல் ரவுண்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரை (2025-2027) ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்குள் 2027ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தற்போது ஆஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும் ஒருநாள், டி20யில் 2ஆம் இடத்திலும் இருக்கிறது. ஆஸி. சிறப்பாக செயல்பட மெக்டொனால்ட்டுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தலைமைப் பயிற்சியாளர் மெக்டொனால்ட் கூறியதாவது:

மிகச் சிறந்த வீரர்கள், அணித் தலைவர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவுபவர்களைப் பெற்றதுக்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என்னுடன் பணியாற்றும் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் மிகவும் அனுபவம், தொழில் நேர்த்தி, அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். அதனால்தால் இவ்வளவு வெற்றிகள் கிடைத்துள்ளது. அதைவிடவும் ஒற்றுமை, நம்பிக்கை, உள்ளடங்கிய முடிவுகள்தான் முக்கியமாக இருக்கின்றன.

அனைத்து அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் என்பது சவாலானதாகவே உள்ளது. இருந்தும் எங்களது அணி சிறப்பாக செயல்படுவது குறித்த பெருமிதம் இருக்கிறது. அனைத்து கிரிக்கெட்டிலும் எங்களது வீரர்கள், பயிற்சியாளர்கள் ஒன்றினைந்து செயல்படுவது பாராட்டத்தக்கது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments