FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

அதிக ரன்கள் குவித்து ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

Updated On : 25 பிப்ரவரி 2025, 3:09 pm IST
- படம் | ஐசிசி
பகிர்:

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.

ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு

Advertisement

Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து மூன்றாமிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 27,503* ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு முன்பாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்திலும், இலங்கை வீரர் குமார் சங்ககாரா 28,016 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 34,357 ரன்கள்

குமார் சங்ககாரா (இலங்கை) - 28,016 ரன்கள்

விராட் கோலி (இந்தியா) - 27,503* ரன்கள்

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 27,483 ரன்கள்

மஹேலா ஜெயவர்த்தனா (இலங்கை) - 25,957 ரன்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments