காசு சுண்டுதலின் போது.. 
கிரிக்கெட்

2-வது அரையிறுதி: டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங்!

2-வது அரையிறுதி: டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங்.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது அரையிறுதியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.

இந்த நிலையில் மற்றும் இறுதிப் போட்டியாளர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் 2-வது அரையிறுதிப் போட்டி பாகிஸ்தானின் கடாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பதிலாக அணியில் கேப்டன் டெம்பா பவுமா இணைந்துள்ளார்.

இதுவரை இவ்விரு அணிகளும் 73 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்பிரிக்க அணி 42 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 26 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 5 போட்டிகளில் முடிவில்லை.

நியூசிலாந்து

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டஃபி.

தென்னாப்பிரிக்கா

டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டோனி டி ஜோர்ஜி, மார்கோ யான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, ராஸ்ஸி வான் டெர் டுசென்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது: காங்கிரஸ் விமா்சனம்

ஒரு லட்சத்துக்கும்மேல் வருவாய் ஈட்டிய ஓட்டுநா், நடத்துநா்களுக்குப் பரிசு வழங்கல்!

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே இரு வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு!

மேல்மலையனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் திறப்பு!

SCROLL FOR NEXT