ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவில் பிசிசிஐக்கு எந்த தொடர்பும் இல்லை: பிசிசிஐ துணைத் தலைவர்
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட முடிவு என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட முடிவு என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 7) அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா போன்று இந்திய அணிக்காக விளையாடியவர்கள் சிலரே: கபில் தேவ்
Advertisement
Advertisement
பிசிசிஐக்கு எந்த தொடர்பும் இல்லை
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென ரோஹித் சர்மா அறிவித்த நிலையில், ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவு அவரது தனிப்பட்ட முடிவு எனவும், பிசிசிஐ தரப்பிலிருந்து எந்த ஒரு அழுத்தமும் அவருக்கு இல்லை எனவும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த ஒரு வீரரையும் ஓய்வு பெற வேண்டும் என பிசிசிஐ தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படாது. வீரர்களின் ஓய்வு குறித்து பிசிசிஐ எதுவும் தெரிவிப்பதும் கிடையாது. ரோஹித் சர்மா மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். ரோஹித் சர்மா கிரிக்கெட்டிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெறவில்லை என்பது நல்ல விஷயம். அதனால், அவரது அனுபவத்தையும், திறமையையும் நாங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.
38 வயதாகும் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.