தில்லி பேட்டிங்; பஞ்சாப் பந்துவீச்சு: 2 அணிகளிலும் மாற்றமில்லை!
நடப்பு ஐபிஎல் சீசனில் 35ஆவது போட்டி குறித்து...
நடப்பு ஐபிஎல் சீசனில் 35ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இரண்டு அணிகளின் கேப்டன்களுமே பிளேயிங் லெவனில் மாற்றமில்லை எனக் கூறியுள்ளார்கள். புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கும் தில்லி அணி வென்றால் 4 அல்லது 5ஆவது இடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி கேபிடல்ஸ் அணி தனது சொந்த மண்ணில் பஞ்சாபை எதிர்த்து விளையாடுகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் மூன்றில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது.
Advertisement
பஞ்சாப் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றியும் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் தோல்வியே சந்திக்காத அணியாக ஆதிக்க செலுத்தி வருகிறது.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிக்ஸ் அணியின் ஆதிக்கத்துக்கு தில்லி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.