ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக... விராட் கோலி அதிரடி சாதனை!
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக 9,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல்முறையாக 9,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று தில்லியில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி அணி 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், பெங்களூரு அணி 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதில், நட்சத்திர வீரர் விராட் கோலி 23* ரன்கள் அடித்திருந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
Advertisement
இதன்மூலம், ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 9,012 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை 8 சதங்கள் மற்றும் 66 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஒரு போட்டியில் அவரது அதிகபட்ச ரன்கள் 113* ஆக உள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:
விராட் கோலி (பெங்களூரு) - 9,012 ரன்கள் (275 போட்டிகள்)
ரோஹித் சர்மா (மும்பை) - 7,183 ரன்கள் (276 போட்டிகள்)
ஷிகர் தவான் (பஞ்சாப்) - 6,769 ரன்கள் (222 போட்டிகள்)
டேவிட் வார்னர் (தில்லி) - 6,565 ரன்கள் (184 போட்டிகள்)
கேஎல் ராகுல் (தில்லி) - 5,580 ரன்கள் (153 போட்டிகள்)