சுரேஷ், சஞ்சய், ராஜ் அசத்தல்: திருச்சி அணி 173 ரன்கள் குவிப்பு!
டிஎன்பிஎல் இரண்டாவது போட்டியில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழா அணி குறித்து...
தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) இரண்டாவது போட்டியில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழா அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது.
டாஸ் வென்று பந்துவீசிய மதுரை பேந்தர்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசினாலும் கடைசியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது.
திருச்சி அணியில் தொடக்க வீரர் சுரேஷ் குமார் 18 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அசத்தினார். மறுபிறம் மதுரை அணியின் ராஜலிங்கம் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
Advertisement
Advertisement
பின்னர், மிடில் ஆர்டரில் சஞ்சய் யாதவ், ரவி ராஜ்குமார் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இறுதியில் ரவி 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சஞ்சய் யாதவ் 37 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மதுரை அணி சார்பாக தீபேஷ் அசத்தலாக பந்துவீசினார். இருப்பினும் அவருக்கு ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது. ராஜலிங்கம் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
டிஎன்பிஎல் முதல் போட்டியில் திருப்பூர் அணியை திண்டுக்கல் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
Suresh, Sanjay, and Raj shine: Trichy Grand Chola set a target 174 runs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.