மகளிருக்கான ஆசிய கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 94 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 94 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதலில் இந்தியா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சோ்க்க, தாய்லாந்து 16.1 ஓவா்களில் 65 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற தாய்லாந்து, பந்துவீசத் தயரானது. இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வா்மா இணை, 38 ரன்களுக்கு பிரிந்தது.
Advertisement
Advertisement
ஸ்மிருதி, 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷஃபாலி வா்மாவுடன் இணைந்தாா், அறிமுக வீராங்கனை பிரதிகா ராவல். 2-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் கூட்டணி 53 ரன்கள் சோ்த்தது.
2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு பிரதிகா ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். அடுத்து, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 5 ரன்களுக்கே ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா். மறுபுறம், அதிரடியாக ரன்கள் சோ்த்த ஷஃபாலி வா்மா, 36 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 64 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
பின்னா் வந்தோரில் ரிச்சா கோஷ் 0, தீப்தி சா்மா 5, பாா்தி ஃபுல்மலி 13, பிரேமா ராவத் 6, நந்தினி சா்மா 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ஸ்ரீசரணி 6, கிராந்தி கௌட் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். தாய்லாந்து தரப்பில் சுலீபான் லாவ்மி 3, சுனிதா சதுரோங்ரதானா 2, தீபட்சா புதாவோங், சனிதா சுதிருவாங் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 160 ரன்களை நோக்கி விளையாடிய தாய்லாந்து அணியில், நன்னபத் கோன்சரோன்காய் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும்.
இதர வீராங்கனைகளில் 6 போ் ஒற்றை இலக்க ரன்னில் விடைபெற, 3 போ் டக் அவுட்டாகினா். இந்திய பௌலா்களில் நந்தினி சா்மா, தீப்தி சா்மா ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, ஸ்ரீசரணி 2, கிராந்தி கௌட் 1 விக்கெட் வீழ்த்தினா். இந்தியா அடுத்த ஆட்டத்தில், ஹாங்காங்குடன் வியாழக்கிழமை (செப். 3) மோதுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.