ஷிகர் தவான், சோஃபியா ஷைன். படம்: இன்ஸ்டா / ஷிகர் தவான்.
கிரிக்கெட்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான் மறுமணம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு (40 வயது) மறுமணம் நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்தியாவின் தொடக்க வீரரான ஷிகர் தவான் இடது கை பேட்டராக மிகவும் புகழ்பெற்று விளங்கினார். ஐபிஎல் போட்டிகளிலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார்.

முதல் மனைவியைப் பிரிந்த பிறகு, தற்போது தனது காதலி சோஃபியா ஷைனை மறுமணம் செய்துள்ளார்.

கடந்த மே.2025ல் தனது காதலை பொதுமக்களுக்கு ஷிகர் தவான் அறிவித்திருந்தார். கடந்த ஜன.2026ல் நிச்சயதார்த்தம் செய்த இவர்கள், பிப்.21ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள்.

கடந்த பிப்.20ஆம் தேதி ஷிகர் தவானும் சோபியாவும் ஹால்தியைக் கொண்டாடினார்கள்.

சோபியா ஐரிஷ் தயாரிப்பு நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இருவரும் துபையில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

ஷிகர் தவான் தனது முதல் மனைவியான ஆஷா முகர்ஜியை கடந்த அக்.2023-ல் விவாகரத்து செய்தார். கடந்த 2011-ல் திருமணம் செய்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தார்கள்.

தனது மகனைப் பார்க்க முன்னாள் மனைவி அனுமதிப்பதில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.

தில்லி உயர்நீதி மன்றத்திலும் இது குறித்து தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை ஷிகர் தவான் தெரிவித்திருந்தார்.

தற்போது, தனது காதலி சோஃபியா ஷைனை 40 வயதில் திருமணம் செய்துள்ளார்.

Shikhar Dhawan marries girlfriend Sophie Shine in private ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

SCROLL FOR NEXT