ஹார்திக் பாண்டியா. படம்: எக்ஸ் / ஹார்திக் பாண்டியா.
கிரிக்கெட்

ஒட்டுமொத்த உலகில் ஒரேயொரு ஹார்திக் பாண்டியாதான்..! முன்னாள் வீரர் புகழாரம்!

இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவின் ஆல் - ரவுண்டர் ஹார்திக் பாண்டியா குறித்து முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா பெருமிதமாகப் பேசியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா, “வரும் டி20 உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இல்லாவிட்டால் இந்திய அணி முழுமைப் பெறாது” எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்திடன் ஒருநாள் தொடரை இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

முதல் போட்டி இன்று நாகபுரியில் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் 7ஆம் தேதி டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்க இருக்கின்றன.

உலகத்திலேயே ஒரேயொரு ஹார்திக் பாண்டியா

இந்நிலையில், ஹார்திக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:

ஹார்திக் பாண்டியா இல்லாமல் இந்திய அணி முழுமைப் பெறாது. ஒட்டுமொத்த உலகத்திலேயே ஒரேயொரு ஹார்திக் பாண்டியா மட்டும்தான் இருக்கிறார்.

பந்துவீச்சு, பேட்டிங்கில் ஹார்திக்கைப் போல இந்தியாவில் யாருமே இல்லை.

இன்னொருவர் கிடைக்க மாட்டார்

குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி நமக்குத் தேவை. ஆனால், நம்.8-ல் பேட்டர் தேவை.

12 வீரர்களையும் களத்தில் ஃபீல்டிங் செய்யவைக்க முடியாது. ஹார்திக் பாண்டியா மட்டுமே இதைச் செய்வார்.

தொடக்கத்தில் புதிய பந்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். இறுதி ஓவரில் பந்து வீசுவார். அவரால்தான் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்றது.

ஹார்திக் பாண்டியா மட்டுமே இப்படியான செயலைச் செய்ய முடியும். இவரைப் போல இன்னொருவர் கிடைக்க மாட்டார் என்றார்.

Former India opener Aakash Chopra says India are "incomplete" without Hardik Pandya, underlining the all-rounder's unmatched value as the team begins its final preparation for the T20 World Cup with a crucial five-match series against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப்பின் காஸா அமைதி வாரியத்தில் இணைந்த பாகிஸ்தான்! இந்தியாவின் முடிவு என்ன?

சதத்தை தவறவிட்ட அபிஷேக் சர்மா..! இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

கையில் சிகரெட்! 120கி.மீ வேகம்! கார் விபத்தில் 4 பேர் பலி!

பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ம.பி.யில் 27 டன் மாட்டிறைச்சி பறிமுதல் செய்த விவகாரம்! மேயருக்கு எதிராக பஜ்ரங் தள் போராட்டம்!

SCROLL FOR NEXT