ஆட்ட நாயகனான நாதன் எல்லீஸ்..! பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்து...
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஜூன் 2) மாலை 4.30 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீசியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 231/9 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கிரீன் 53, கேப்டன் இங்லீஷ் 51ரென்ஷா 43 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் சார்பிக் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 44 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷதாப் கான் 71 ரன்கள் குவித்தார். ஆஸி. சார்பில் நாதன் எல்லீஸ் 4 விக்கெட்டுகளும் மேத்திவ் ஷார்ட் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
Advertisement
Advertisement
முதல் போட்டியில் பாகிஸ்தான் வெல்ல, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரை 1-1 என சமன்படுத்தியுள்ளது. கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜூன் 4) லாகூரில் நடைபெற இருக்கிறது.
சிஎஸ்கே அணியில் காயம் காரணமாக விளையாடாத நாதன் எல்லீஸ் தற்போது சிறப்பாக பந்துவீசியது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.