ஒருநாள் போட்டி: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை!
இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி குறித்து...
இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
ஜமைக்காவில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீ. அணி பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 303/7 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 79 ரன்கள் எடுத்தார்.
Advertisement
Advertisement
அடுத்து விளையாடிய மே.இ.தீ. அணி 49.2 ஓவர்களில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 56 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் மே.இ.தீ. அணி சார்பில் சீல்ஸ், போர்டி, சேஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இலங்கை சார்பில் துஸ்மந்த் சமீரா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் 72 ரன்கள் குவித்த இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அடுத்தடுத்த போட்டிகள் சனிக்கிழமை, திங்கள் கிழமை நடைபெற இருக்கின்றன.