ஹோல்டர் ஆட்ட நாயகன்: இலங்கையை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி குறித்து...
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன.
ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இலங்கை வெல்ல, மற்ற இரண்டு போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், முதல் டி20 போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
Advertisement
Advertisement
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 147/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 51, குசல் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்தார்கள். ஹோல்டர், ஷமேர் ஜோசப் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.
அடுத்து பேட்டிங் செய்த மே.இ.தீ. அணியினர் 19.2 ஓவர்களில் 149/3 ரன்கள் எடுத்து வென்றனர். இதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 65 ரன்கள் எடுத்தார். கடைசியில் 20 பந்துகளுக்கு 20 ரன்கள் தேவையானபோது ரோமன் பவல் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து அசத்தினார்.
பந்துவீச்சில் அசத்தில் ஜேசன் ஹோல்டருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரிலும் ஹோல்டர் சிறப்பாக பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.