உணவு இடைவேளை: 475 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா!
இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் குறித்து...
இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை வரையில் 110 ஓவர்களில் இந்திய அணி 475 / 6 ரன்கள் குவித்துள்ளது.
முல்லான்பூரில் நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் முடிவில் 368/3 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாம் நாளான இன்று ஷுப்மன் கில் 126 ரன்களுக்கும் ரிஷப் பந்த் 81 ரன்களுக்கும் துருவ் ஜுரெல் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். வாஷிங்டன் சுந்தர் - மானவ் சுதர் களத்தில் இருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது சலீம் சாஃபி 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இன்று முழுவதும் இந்தியா அணி பேட்டிங் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதவிருக்கின்றன.