FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

உணவு இடைவேளை: 475 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா!

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் குறித்து...

Updated On : 7 ஜூன் 2026, 12:02 pm IST
ஷுப்மன் கில், ரிஷப் பந்த். - படம்: பிசிசிஐ
பகிர்:

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை வரையில் 110 ஓவர்களில் இந்திய அணி 475 / 6 ரன்கள் குவித்துள்ளது.

முல்லான்பூரில் நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் முடிவில் 368/3 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாளான இன்று ஷுப்மன் கில் 126 ரன்களுக்கும் ரிஷப் பந்த் 81 ரன்களுக்கும் துருவ் ஜுரெல் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். வாஷிங்டன் சுந்தர் - மானவ் சுதர் களத்தில் இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது சலீம் சாஃபி 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இன்று முழுவதும் இந்தியா அணி பேட்டிங் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதவிருக்கின்றன.

summary

Day 2: Lunch Break, India score 475 runs for 6 wickets against afghanistan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments