முகப்பு
கிரிக்கெட்

உணவு இடைவேளை: 475 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா!

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் குறித்து...

Updated On : 7 ஜூன் 2026, 12:02 pm IST
ஷுப்மன் கில், ரிஷப் பந்த். - படம்: பிசிசிஐ
பகிர்:

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை வரையில் 110 ஓவர்களில் இந்திய அணி 475 / 6 ரன்கள் குவித்துள்ளது.

முல்லான்பூரில் நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் முடிவில் 368/3 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாளான இன்று ஷுப்மன் கில் 126 ரன்களுக்கும் ரிஷப் பந்த் 81 ரன்களுக்கும் துருவ் ஜுரெல் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். வாஷிங்டன் சுந்தர் - மானவ் சுதர் களத்தில் இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது சலீம் சாஃபி 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இன்று முழுவதும் இந்தியா அணி பேட்டிங் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதவிருக்கின்றன.

summary

Day 2: Lunch Break, India score 475 runs for 6 wickets against afghanistan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.