முகப்பு
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் மிகவும் முக்கியம்; அறிமுக வீரர் மானவ் சுதர் கூறியதென்ன?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் மானவ் சுதர் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசியுள்ளார்.

Updated On : 8 ஜூன் 2026, 7:32 pm IST
- படம் | AP
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் மானவ் சுதர் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசியுள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நியூ சண்டீகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மானவ் சுதர் களமிறங்கினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும், அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவது மற்றும் பொறுமை இந்த இரண்டும்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியம் என்பதை கற்றுக்கொண்டதாக மானவ் சுதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவதுதான் முக்கியம் என்பதுதான் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடம். தொடர்ச்சியாக சரியான இடத்தில் பந்துவீச வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அது மிகவும் முக்கியம் என நினைக்கிறேன். டெஸ்ட் வடிவிலான போட்டிக்கு அதிக அளவிலான பொறுமை தேவை.

தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவது, பொறுமையாக இருப்பது இந்த இரண்டையும் நான் கற்றுக் கொண்டேன். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

summary

Debut player Manav Suthar, who displayed exceptional bowling in the Test match against Afghanistan, has spoken about Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.