இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை: கிளன் மெக்ராத்
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி மூன்று நாள்களில் முடிவடைந்தது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி மூன்று நாள்களில் முடிவடைந்தது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. நியூ சண்டீகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் மூன்றே நாள்களில் நிறைவடைந்துவிட்டது.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் கடும் போட்டி இருக்க வேண்டும் எனவும், போட்டி 5 நாள்கள் வரை விளையாடப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அனி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது நல்ல உணர்வைத் தருகிறது. ஆனால், போட்டி மூன்றே நாள்களில் நிறைவடைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. என்னைப் பொருத்தவரை, டெஸ்ட் போட்டி ஐந்து நாள்கள் வரை நீடிக்க வேண்டும். ஐந்தாவது நாளில் ஆடுகளம் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர் என இருவருக்கும் சவாலளிக்கும் விதமாக இருக்கும். வீரரின் தரத்தினை சோதிப்பதாக கடைசி நாள் போட்டி இருக்கும்.
தற்போது டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாள்கள் வரை நீடிப்பதில்லை. ஐந்து நாள்களுக்கு முன்பாகவே போட்டி நிறைவடைந்து விடுகிறது. ஏற்கனெவே கூறியதுபோல, டெஸ்ட் போட்டியானது ஐந்து நாள்கள் வரை விளையாடப்பட வேண்டும். அதிரடியாக விளையாடுவதற்கு ஒருநாள், டி20 போன்ற குறுகிய வடிவிலான ஆட்டங்கள் உள்ளன என்றார்.
Glenn McGrath has expressed that he is not happy about the Test match between India and Afghanistan concluding in three days.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.