முகப்பு
கிரிக்கெட்

15 வயது சிறுவனைப் பார்த்து பயப்படுவேன் என நினைக்கவில்லை: ஜேமிசன்

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து தில்லி வீரர் கைல் ஜேமிசன் பேசியிருப்பதாவது...

வைபவ் சூர்யவன்ஷி, கைல் ஜேமிசன். - படங்கள்: ஏபி, பிசிசிஐ.
பகிர்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து தில்லி வீரர் கைல் ஜேமிசன், “15 வயது சிறுவனைப் பார்த்து பயப்படுவேன் என நான் நினைத்ததே இல்லை” எனக் கூறியுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 225/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 19.1 ஓவர்களில் 226/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் அதிரடியான தொடக்க வீரர் சூர்யவன்ஷி (15 வயது) 1.5ஆவது பந்தில் கைல் ஜேமிசன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

Advertisement

வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடியதற்காக கைல் ஜேம்சனுக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிக்குப் பிறகு கைல் ஜேமிசன், “நான் ஒரு 15 வயது சிறுவனைப் பார்த்து பயப்படுவேன் என நினைத்ததே இல்லை. நல்லவேளையாக எங்களது திட்டம் பலித்தது. மற்ற அணிகள் ராஜஸ்தானின் தொடக்க வீரர்களைக் குறித்து அஞ்சுகிறார்கள்.

மிட்செல் ஸ்டார்க் ஃபுல்டாஸ் பந்தில் ஒரு விக்கெட், யார்க்கர் பந்தில் நான் ஒரு விக்கெட்டை எடுத்து பவர்பிளேவில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கினோம். ஸ்டார்க் போன்ற ஒரு வீரர் அணியில் இணைந்தது கூடுதல் பலம் என்றார்.

summary

The Fear. The Plan. The Execution, ft. Kyle Jamieson about 15 year old kid sooryavanshi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.