ஹார்திக் பாண்டியாவுக்கு 10% அபராதம்..! ஒரு தகுதி இழப்புப் புள்ளி!
மும்பை அணியின் கேப்டனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து...
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதமும் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஈடர்ன் கார்டன் திடலில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 147/8 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 148/6 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் மும்பை அணியினர் குறிப்பிட்ட நேரத்தை விடவும் மெதுவாகப் பந்துவீசியதால் அதன் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு லெவல் 1 குற்றத்திற்காக போட்டிக்கான ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும்போது ஹார்திக் பாண்டியா 10ஆவது ஓவர் நான்காவது பந்தின்போது ஸ்டம்பின் மேலிருந்த பெயில்ஸ்களை தள்ளிவிடுவார். இது ஐபிஎல் விதிமீறல் 2.2ன் படி ஹார்திக் பாண்டியாவுக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆறு சீசன்களாக கோப்பை வெல்லாமல் இருக்கிறது. அத்துடன் இந்த சீசனில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று மோசமாகவும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.